‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
சின்னத்திரை மற்றும் சினிமாவில் ஆக்டிவாக நடித்து வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பாக்கியலெட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்வில் நடந்த சோகமான சம்பவத்தை கூறியுள்ளார். அதில் அவர், ‛‛நான் திருமணமாகி அமெரிக்காவில் இருந்தேன். என் கணவர் பாக்சர் என்பதால் மாத்திரைகள் எடுத்துக்கொள்வார். நான் நான்கரை மாதம் கர்ப்பமாக இருந்த போது என் கணவர் என்னை தாக்கியதில் குழந்தை வெளியே வந்துவிட்டது. அதை பார்த்த என் கணவர் ஓடி விட்டார்.
பிறகு நான் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அங்கே நான்கரை மாத குழந்தையாக ராகுல் பிறந்தான். ஏற்கனவே என் முதல் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. எனவே, ராகுலை காப்பாற்ற போராடினேன். 9 மாதங்கள் இங்குபேட்டரில் இருந்தான். அவனுக்காக செய்யாத செலவுகள் இல்லை. அதை சமாளிக்க தான் நான் என் பெற்றோருடனேயே வந்து தங்கிவிட்டேன். என்னை போல் வாழ்க்கையில் எதையும் சிரித்துக்கொண்டே தைரியமாக எதிர் கொள்பவர்கள் அனைவரது பின்னாலும் ஒரு சோகக்கதை இருக்கிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது தெரியாது. அவர்களுக்கு விமர்சிக்க மட்டுமே தெரியும்,'' என்றும் அந்த பேட்டியில் ரேஷ்மா கூறியுள்ளார்.