Advertisement

சிறப்புச்செய்திகள்

மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய 'மின்னல் முரளி' இயக்குனர்

15 செப், 2025 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Minnal-Murali-Director-Basil-Joseph-announces-his-production-company-using-super-hero-baby


மலையாள திரையுலகில் 'குஞ்சிராமாயணம்' என்கிற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பஷில் ஜோசப். அதைத் தொடர்ந்து 'கோதா' மற்றும் சூப்பர்மேன் கதை அம்சம் கொண்ட 'மின்னல் முரளி' ஆகிய படங்களை இயக்கினார். இதில் மின்னல் முரளி திரைப்படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேசமயம் அந்த படம் இயக்குவதற்கு முன்பே நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த பஷில் ஜோசப் தொடர்ந்து கதையின் நாயகனாகவும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்து பிசியான நடிகராக மாறினார்.

மின்னல் முரளி படம் வெளியாகி நான்கு வருடங்களுக்கு பிறகும் இன்னும் டைரக்ஷன் பக்கம் திரும்ப முடியாமல் தொடர்ந்து நடித்து வருகிறார் பஷில் ஜோசப். இதில் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, குருவாயூர் அம்பல நடையில், சூட்சும தர்ஷினி' உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன, இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் பஷில் ஜோசப். இவரது நிறுவனத்திற்கு பஷில் ஜோசப் என்டர்டெயின்மென்ட் என பெயர் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதுவரை நான் ஒருபோதும் செய்திராத பட தயாரிப்பு விஷயத்தை முயற்சித்து பார்க்க போகிறேன். இப்போதும் இதை எப்படி செய்யப் போகிறேன் என்று தெரியாது. ஆனால் மிகச்சிறந்த கதைகளை, துணிச்சலான கதைகளை புதிய வழிகளில் சொல்ல வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறேன். இந்த புதிய பாதை நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது என பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.

பஷில் ஜோசப்பின் நண்பரும் அவருடைய டைரக்சனில் கோதா மற்றும் மின்னல் முரளி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவருமான டொவினோ தாமஸ், “அப்படி என்றால் உன்னுடைய தயாரிப்பில் முதல் படத்தில் நான் கதாநாயகன் இல்லையா ?” என்று ஜாலியாக தனது அடுத்த படத்திற்கான வாய்ப்புக்கு அடி போட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லோகா படப்பிடிப்பின் போது வீட்டுக்கு செல்வதையே தவிர்த்தேன் ; சாண்டிலோகா படப்பிடிப்பின் போது வீட்டுக்கு ... முதலில் மறக்கப்பட்டதா ‛ஜனனி' பாடல் : பாடி முடித்து வைத்த இளையராஜா முதலில் மறக்கப்பட்டதா ‛ஜனனி' பாடல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in