பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மலையாளத்தில் சூப்பர் உமன் கதை அம்சத்துடன் கூடிய 'லோகா சாப்டர் 1 ; சந்திரா' திரைப்படம் வெளியானது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்திருந்த படத்தில் கதாநாயகனாக 'பிரேமலு' புகழ் நடிகர் நஸ்லேன் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் சமமாக இன்னொரு முக்கியமான வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடன இயக்குனர் சாண்டி நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் நடிக்கும் முதல் படம் இதுதான். அவரது முதல் படமே கிட்டத்தட்ட 200 கோடி வரை வசூலித்திருப்பதும் அவரது கதாபாத்திரத்திற்கு மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதும் அவரை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.
இந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் சாண்டி கூறும்போது, “இந்த படத்தில என்னுடைய கதாபாத்திரம் நிஜமான ஒரு சைக்கோ போன்றது தான். இந்த படப்பிடிப்பில் நடிக்கும்போதெல்லாம் எனது வீட்டிற்கு செல்வதையே தவிர்த்தேன். வீட்டாருடன் போனில் பேசுவதைக் கூட தவிர்த்தேன். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் என்னை தொந்தரவு செய்தது. இதற்கு முன்பு லியோ படத்தில் நடித்தபோதும் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்பதால் அப்போதும் இதேபோல தான் வீட்டிற்கு செல்லாமல் வீட்டாருடன் பேசாமல் அந்த படப்பிடிப்பில் நடித்தேன்” என்று கூறியுள்ளார்.