‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! |
வெள்ளித்திரையில் 80கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பலரும் தற்போது சீரியல்களில் மாமியார், வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சீனியர் நடிகைகளான அம்பிகா, நளினி, பூர்ணிமா ஆகியோர் ஒரே தொடரில் ஒன்றாக இணைந்து நடிக்கின்றனர். புதிதாக ஒளிபரப்பாகும் ‛மல்லி' தொடரில் தான் இந்த சீனியர் நடிகைகள் ஒன்றாக சங்கமித்துள்ளனர்.
இதுகுறித்து, அண்மையில் பேட்டியளித்துள்ள அம்பிகா, '1983 காலக்கட்டத்தில் பூர்ணிமாவுடன் மலையாள படத்தில் சேர்ந்து நடித்தேன். அதன்பிறகு 1986ல் நளினியுடன் கன்னட படத்தில் நடித்தேன். தற்போது 40 வருடத்திற்கு பிறகு அவர்களுடன் சேர்ந்து நடிப்பது ஸ்கூல் ரீயூனியன் போல் உள்ளது,' என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.