டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் மணிரத்னம் ஆகிய இருவரும் இன்றைய தினம் தங்களது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அந்த பதிவில், ‛இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றது தான் இன்றைய நாள் எனக்கு. மூன்று சகோதரர்களின் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள். தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது. இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா. திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தை சேர்த்து விடும் அன்புத்தம்பி மணிரத்னம் பிறந்த நாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். எங்கள் மூவரின் கலை சொந்தம் என்றென்றும் தொடர்க,' என்று பதிவிட்டு அவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்திருக்கிறார் கமலஹாசன்.




