பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் மணிரத்னம் ஆகிய இருவரும் இன்றைய தினம் தங்களது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அந்த பதிவில், ‛இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றது தான் இன்றைய நாள் எனக்கு. மூன்று சகோதரர்களின் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள். தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது. இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா. திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தை சேர்த்து விடும் அன்புத்தம்பி மணிரத்னம் பிறந்த நாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். எங்கள் மூவரின் கலை சொந்தம் என்றென்றும் தொடர்க,' என்று பதிவிட்டு அவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்திருக்கிறார் கமலஹாசன்.