நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் மணிரத்னம் ஆகிய இருவரும் இன்றைய தினம் தங்களது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அந்த பதிவில், ‛இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றது தான் இன்றைய நாள் எனக்கு. மூன்று சகோதரர்களின் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள். தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது. இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா. திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தை சேர்த்து விடும் அன்புத்தம்பி மணிரத்னம் பிறந்த நாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். எங்கள் மூவரின் கலை சொந்தம் என்றென்றும் தொடர்க,' என்று பதிவிட்டு அவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்திருக்கிறார் கமலஹாசன்.