ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் மணிரத்னம் ஆகிய இருவரும் இன்றைய தினம் தங்களது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அந்த பதிவில், ‛இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றது தான் இன்றைய நாள் எனக்கு. மூன்று சகோதரர்களின் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள். தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது. இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா. திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தை சேர்த்து விடும் அன்புத்தம்பி மணிரத்னம் பிறந்த நாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். எங்கள் மூவரின் கலை சொந்தம் என்றென்றும் தொடர்க,' என்று பதிவிட்டு அவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்திருக்கிறார் கமலஹாசன்.