நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி அபுதாபியில் சுவாமி நாராயண் கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதையடுத்து சமீபத்தில் வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அபுதாபிக்கு சென்ற ரஜினிகாந்த் அந்த கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சரத்குமாரும் தனது மனைவி ராதிகா மற்றும் மகனுடன் அபுதாபி நாராயணன் சுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த வீடியோவை வெளியிட்டு ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், அபுதாபி சுவாமி நாராயணன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று இருந்தேன். அமைதி, நல்லிணக்கம் கொண்ட இந்த ஆலயத்துக்கு நாங்கள் செல்வது இது மூன்றாவது முறையாகும். இந்த முறை மே 28ம் தேதி சென்றிருந்தோம். அங்கு காணப்பட்ட காட்சிகள் ஏற்பட்ட ஆன்மிக உணர்வுகள் அமைதியை தருகின்றன. அங்குள்ள சுவாமிஜியிடம் ஆசி பெற்று தெய்வீக தரிசனம் பெற்றோம் என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகர் சரத்குமார்.