ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
தமிழ் சினிமாவில் 150 படங்களில் நடித்தவர் விஜயகாந்த். பெரும்பாலும் ஆக்சன் படங்களாக நடித்துள்ள இவர் அரசியலில் நுழைந்த பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். கருணாநிதி -ஜெயலலிதா காலத்தில் தேமுதிக என்னும் கட்சியை துவக்கி அதிரடி அரசியல் செய்து வந்த விஜயகாந்த், ஒரு கட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அரசியலில் இருந்து விலகி இருந்து வருகிறார். அதோடு அவருக்கு அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் காலில் இருந்து மூன்று விரல்கள் எடுக்கப்பட்டது.
இது குறித்து தேமுதிக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்னையால் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். மேலும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.