தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
டில்லி செங்கோட்டை மைதானத்தில், லவ குஷ் ராமலீலா குழு சார்பில் ஆண்டுதோறும் ராமலீலா நாடகம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடகத்தில் மண்டோதரி கேரக்டரில் பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இது பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாலிவுட்டில் ஆபாச நடிகையாக வலம் வருபவர், புனிதமான ஒரு நாடகத்தில் அதுவும் மண்டோதரி கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது பக்தர்களின் மனதை புண்படுத்தும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்தநிலையில் ராமலீலா குழுவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், 'ராமலீலா என்பது வெறும் நாடகம் அல்ல. அது இந்திய பாரம்பரியத்தின் அடையாளம். மண்டோதரி கதாபாத்திரம் நல்லொழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் சிறந்த மனைவிக்கான இலக்கணமாக கருதப்படுகிறது. எனவே, ஒரு நடிகையின் பொதுவாழ்க்கை அந்த கதாபாத்திரத்தின் மாண்புடன் பொருந்தியிருக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் தற்போது இந்த நாடகத்தில் இருந்து பூனம் பாண்டே நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.