ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் |

தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் பழைய திரைப்படப் பாடல்களை தங்களது படங்களில் சில இயக்குனர்களில் பயன்படுத்தி புதிய டிரென்ட் ஒன்றை உருவாக்கினார்கள். அவை படத்திற்கு பக்கபலமாகவும் அமைந்ததால் பலரும் அதைத் தொடர்ந்தார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், அஜித், த்ரிஷா நடித்து வெளிவந்த 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் இசையில் வந்த 'இளமை இதோ இதோ, ஒத்த ரூபாய் தாரேன், எஞ்சோடி மஞ்சக்குருவி' ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
தன்னிடம் முறையான அனுமதி பெறாமல் இப்பாடல்களைப் பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த மூன்று பாடல்களையும் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.
இதனிடையே, ஓடிடி தளத்தில் இடம் பெற்றுள்ள 'குட் பேட் அக்லி' படத்தில் இன்னும் அந்தப் பாடல்கள் நீக்கப்படவில்லை, அப்படியே இருக்கின்றன. அந்தப் பாடல்கள்தான் படத்தின் சிறப்பம்சமாக இருந்தது. தற்போது அந்தப் பாடல்கள் இல்லையென்றால் படத்தைப் பார்க்க முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது.




