வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக உருவாக்கப்பட்ட படம் 'ட்வென்டி-20'. மலையாள சினிமாவின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களையும் இணைத்து இந்தப்படத்தை வெற்றிகரமாக இயக்கியவர் ஆக்ஷன் படங்களில் பிதாமகன் என அழைக்கப்படும் இயக்குனர் ஜோஷி. கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள ஜோஷி, மோகன்லால் மம்முட்டி, சுரேஷ்கோபி, திலீப் என முன்னணி ஹீரோக்களை வைத்தே படங்களை இயக்கியவர்.
எல்லா இயக்குனர்களுக்கும் ஒரு கட்டத்தில் ஏற்படும் இறங்குமுகத்தை போல, ஜோஷி கடைசியாக இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. இந்த நிலையில் சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்த இயக்குனர் ஜோஷியை மீண்டும் கைதூக்கி விடும் விதமாக அவரது படத்தில் நடிக்கிறார் சுரேஷ்கோபி. இந்த படத்திற்கு பாப்பன் என டைட்டில் வைக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.