இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கொரோனா தாக்கம் ஓரளவு குறைந்த நிலையில், இந்த புது வருடம் நடிகர் விஜய்சேதுபதிக்குத்தான் வெகு சிறப்பாக துவங்கியுள்ளது என்று சொல்லலாம். கடந்த ஜனவரியில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்யை விட விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் பெரிதும் பாராட்டு பெற்றது. அதை தொடர்ந்து இந்த வாரம் தமிழில் வெளியாகியுள்ள 'குட்டி ஸ்டோரி' என்கிற ஆந்தாலாஜி படத்திலும், தெலுங்கில் வெளியாகியுள்ள உப்பென்னா படத்திலும் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இதில் மாஸ்டர் படத்தை போலவே உப்பென்னாவிலும் விஜய்சேதுபதியின் நடிப்பு தெலுங்கு ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.
இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தற்போது கலந்துகொண்டு வரும், படத்தின் ஹீரோ வைஷ்ணவ் தேஜ் விஜய்சேதுபதியுடன் நடித்த அனுபவம் பற்றி சிலாகித்து கூறி வருகிறார்.. “படப்பிடிப்பின்போது விஜய்சேதுபதி எனக்கு சின்னச்சின்னதாக நிறைய டிப்ஸ் கொடுத்தார். அதையெல்லாம் விட ஒரு காட்சியில் நடித்தபோது அது சிறப்பாக வரவில்லை என அவருக்கு தோன்றினால், மானிட்டரை எல்லாம் பார்க்க வரமாட்டார். அடுத்த ஷாட் எடுக்கலாம் என உடனே தயாராகி விடுவார். மானிட்டர் பார்க்க விரும்பாத அவரது இந்த அணுகுமுறையை பார்த்து நான் ரொம்பவே ஆச்சர்யப்பட்டேன்” என கூறியுள்ளார் வைஷ்ணவ் தேஜ்.