தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்துள்ள படம் மாவீரன். இந்த படம் 50 கோடி வசூலை தாண்டி உள்ளது. அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கேட்கும் அந்த குரலுக்கு விஜய் சேதுபதி தான் குரல் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், ‛‛எனக்கும், விஜய்சேதுபதிக்கும் எந்த போட்டியும் இல்லை. அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன். அது விரைவில் நடைபெற வாய்ப்புள்ளது. மாவீரன் படத்தில் அவர் கொடுத்த குரலுக்கு ஒரு பைசா கூட விஜய் சேதுபதி சம்பளம் பெறவில்லை என்று கூறினார்.
அதையடுத்து அவர்கள் இணையும் படம், மாவீரன் படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் அடுத்த படமாக கூட இருக்குமோ என்கிற யூகங்கள் எழுந்துள்ளன.