சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
2021ஆம் வருடத்திற்கான கேரள சர்வதேச திரைப்பட விழா நேற்று சம்பிரதாய துவக்க விழா பூஜையுடன் துவங்கியுள்ளது. கொச்சியில் நடைபெற்ற இந்த விழாவில் தன்னை அழைக்காமல் விழாக்குழுவினர் அவமதித்து விட்டார்கள் என தேசிய விருதுபெற்ற பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம்குமார் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “வயதானவன் என காரணம் காட்டி இந்த விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு அனுப்பாமல் அவமரியாதை செய்துள்ளனர். என்னைவிட ஓரிரு வயதே குறைவான, கல்லூரியில் எனது ஜூனியர்களாக படித்த இயக்குனர் அமல் நீரத், ஆஷிக் அபு ஆகியோரை எல்லாம் அனுமதித்துள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால், தேசிய விருது பெற்ற எனக்குத்தான் இந்த விழாவில் கலந்துகொள்ள அதிக உரிமை இருக்கிறது. என்ன செய்வது இங்கேயும் அரசியல் நுழைந்து விட்டது” என வருத்தத்துடன் கூறியுள்ளார் சலீம்குமார்.