நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
மோகன்லால், மீனா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படமான த்ரிஷ்யத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இதிலும் மோகன்லால், மீனா நடித்துள்ளனர். ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா காலத்தில் இந்தப் படம் தயாரானாதால் அப்போது ஓடிடி தளத்தில் வெளியிட ஒப்பந்தம் போடப்பட்டது. இப்போது சகஜநிலை திரும்பியும் படம் ஓடிடி தளத்தில் வெளிவருவதற்கு மலையாள தியேட்டர் உரிகமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் விஜயகுமார் கூறியிருப்பதாவது: நடிகர்களை பெரிய அந்தஸ்துக்கு உயர்த்தியது திரையரங்குகள்தான். எனவே மோகன்லாலுக்கு மட்டுமல்ல, எல்லா நட்சத்திரங்களுக்குமே திரையரங்குகளைக் காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கிறது.
ஏனென்றால் அதிலிருந்து தான் இவர்கள் அனைத்தையும் பெற்றுள்ளனர். த்ரிஷ்யம் 2 முதலில் திரையரங்க வெளியீடாகத்தான் பதிவு செய்யப்பட்டது. திடீரென ஓடிடியில் வெளியிடுவது நியாயமானதல்ல. நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நடிகருக்கும் எதிரி அல்ல. திரையரங்குகளின் நலனுக்காகவே பேசுகிறோம்.
பல்வேறு காரணங்களால் திரையரங்குள் இழப்பை சந்தித்து வருகிறது. அந்தத் துறையின் பணியாளர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் மோசமாக இருக்கிறது. இதை நட்சத்திரங்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். படம் நாளை அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.