பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த வேதம் படத்தை இயக்கியவர் இயக்குனர் கிரிஷ் பவன். இவர் அடுத்ததாக பவன் கல்யாணின் படத்தை இயக்கவுள்ளார். தற்போது பவன் கல்யாண், அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்கில் நடித்து வருவதால், அந்த இடைப்பட்ட காலத்தில் அறிமுக நடிகர் வைஷ்ணவ் தேஜை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்து விட்டார். இப்படத்தில் ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.
விரைவில் ரிலீஸாக இருக்கும் இப்படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்யலாமா அல்லது தியேட்டர்களில் திரையிடலாமா என குழப்பத்திலேயே இருந்து வந்துள்ளார் கிரிஷ். இந்தநிலையில் தான் வைஷனவ் தேஜ் நடிப்பில் வெளியான உப்பென்னா படம் தியேட்டர்களில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் வெற்றி தந்த நம்பிக்கையால், தனது படத்தை தியேட்டர்களிலேயே வெளியிடும் முடிவுக்கு வந்துள்ளாராம் கிரிஷ்.




