விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
மலையாளத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் இடவேள பாபு. இவர் கடந்த மாதம் வரை மலையாள நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் பொறுப்பு வைத்து வந்தார். கடந்த மாதம் இவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதன் பிறகு வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையை தொடர்ந்து பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து காவல் துறையில் புகார்கள் அளிக்க தொடங்கினர்.
அதில் நடிகர் இடைவேள பாபு உள்ளிட்ட சில நடிகர்கள் மீது நடிகை மினு முனீர் என்பவர் பாலியல் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இது குறித்த விசாரணைக்கு அவரை வரவழைத்த போலீசார் அவரிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில் அவரை கைது செய்த போலீசார் அதன் பிறகு அவரை ஜாமினில் விடுவித்தனர்.