கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! |
மலையாளத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் இடவேள பாபு. இவர் கடந்த மாதம் வரை மலையாள நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் பொறுப்பு வைத்து வந்தார். கடந்த மாதம் இவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதன் பிறகு வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையை தொடர்ந்து பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து காவல் துறையில் புகார்கள் அளிக்க தொடங்கினர்.
அதில் நடிகர் இடைவேள பாபு உள்ளிட்ட சில நடிகர்கள் மீது நடிகை மினு முனீர் என்பவர் பாலியல் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இது குறித்த விசாரணைக்கு அவரை வரவழைத்த போலீசார் அவரிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில் அவரை கைது செய்த போலீசார் அதன் பிறகு அவரை ஜாமினில் விடுவித்தனர்.