லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

மலையாள திரையுலகில் விருதுகளை குறிவைத்து படம் இயக்கும் இயக்குனர் சணல்குமார் சசிதரன். அப்படி இவர் நடிகை மஞ்சு வாரியரை கதாநாயகியாக வைத்து காயாட்டம் என்கிற படத்தை இயக்கினார். ஆனால் படம் முடிந்த நிலையில் மஞ்சு வாரியருக்கும், சணல் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனாலேயே இன்னும் கூட படம் வெளியாகவில்லை.. இதனால் மஞ்சு வாரியருக்கு சிலரால் ஆபத்து என்பது போல சோசியல் மீடியாவில் பதிவுகளை வெளியிட்டார் சணல்குமார் சசிதரன்.
தன் மீது வீணாக அவதூறு பரப்புகிறார் என அவர் மீது போலீசில் புகார் அளித்தார் மஞ்சு வாரியர். இதனை தொடர்ந்து அப்போது கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார் சணல்குமார் சசிதரன். ஆனால் போலீசார் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என கூறிய நிலையில் அவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். இதனால் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டிருந்தது. சமீபத்தில் அவர் அமெரிக்காவிலிருந்து கேரளா திரும்புவதற்காக மும்பை விமான நிலையம் வந்து இறங்கியபோது கேரளாவில் இருந்து அங்கே சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து வந்தனர். அதன் பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் தற்போது நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது..