Advertisement

சிறப்புச்செய்திகள்

மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான்

02 அக், 2025 - 05:51 IST
எழுத்தின் அளவு:
Should-Vijay-be-arrested-This-is-the-answer-of-actor-Parthiban


சென்னையில் நடந்த, அபிராம் வர்மா, சனா நடிக்கும் 'மெளனம்' பட பூஜையில் சிறப்பு விருந்தினராக நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ''நான் இட்லிகடை படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தேன். ஏன் கவுரவ வேடம் என்று கேட்கிறார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இருந்து எனக்கும் தனுசுக்கும் சண்டை இருந்தது. 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் அவர் நடிக்க இருந்த கேரக்டரில் நான் நடித்தேன்.

'ஆடுகளம்' படத்தில் கூட நான்தான் நடிக்க வேண்டியது. 'சூதாடி' படத்தில் நானும், அவரும் இணைந்து நடித்தோம். ஆனால், படப்பிடிப்பு தொடரவில்லை. அந்த பாசத்தில் இட்லிகடை படத்தில் நடித்தேன். அந்த கேரக்டருக்கு நல்ல வரவேற்பு. அடுத்து என் மகன் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறேன். அவர் நெல்சன், லோகேஷ் கனகராஜ் மாதிரி பெரிய படம் பண்ணப்போகிறார். இப்போது பெரிய படங்களில் எனக்கு சின்ன ரோல் கொடுக்கிறார்கள். என் பையன் படத்திலும் சின்ன ரோல். அதற்காக தயாரிப்பாளரை தேடிக்கொண்டு இருக்கிறோம். என் மகன் படத்தில் நடிப்பது பெருமை.

சினிமாவில் இருப்பவர்களுக்கு சமூக பொறுப்பு தேவை. மக்கள் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். நான் கூட பார்த்திபன் மனிதநேய மன்றம் தொடங்கினேன். சோத்துகட்சி தொடங்கி மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தேன். ஆனால், அரசியல் வேறு களம். நல்லது செய்ய நினைத்தால் மனசு இருந்தால்போதாது. பணம், பவர் வேணும். இப்போது விஜய் வருகிறார். அது நல்ல விஷயம்தான். பலர் வர வேண்டும். அப்போதுதான் அது நன்றாக இருக்கும், நான் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசவில்லை. கரூர் சம்பவத்தால் பல கருத்துகள், அந்த விவகாரத்தால் அவரை கைது செய்யணுமா என்று கேட்கிறார்கள். அதற்காக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதி இருக்கிறார். இப்படி பேசுவது அத்துமீறல். 2026ல் நான் அரசியலுக்கு வரவில்லை. 'நான்தான் சிஎம்' என்ற படம் எடுக்கப்போகிறேன்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் ... இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in