மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளா அரசு வெளியிட்ட நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை, மலையாள திரை உலகில் கடந்த பல வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் அதிகார மையமாக சேர்ந்து பிறரை வளர விடாமல் தடுப்பது உள்ளிட்ட பல பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் பல பிரபல நடிகர்கள், இயக்குனர்களுடன் தாங்கள் சில வருடங்களுக்கு முன்பு எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்க தொடங்கினர். அந்த வகையில் பிரபல குணச்சித்திர நடிகர்களான முகேஷ், சித்திக் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அந்த வகையில் நடிகர் முகேஷ் முன்ஜாமின் பெற்றிருந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.
ஆனால் நடிகர் சித்திக்கின் ஜாமின் மனு கேரள உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்படும் சூழல் உருவானது. இதனை அறிந்த சித்திக் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தற்போது தலைமறைவாகி உள்ளார். போலீசார் அவர்மீது லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு, அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னொரு பக்கம் உச்சநீதிமன்ற மூலமாக அவருக்கு ஜாமின் பெறுவதற்கான வேலைகளும் துவங்கியுள்ளன. அதன் முடிவை தொடர்ந்து சித்திக் வெளியே வருவார் என சொல்லப்படுகிறது. அதற்குள் போலீசார் அவரை கைது செய்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.