'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சாமி என்பவரை தனது பண்ணை வீட்டில் வைத்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் உள்ளிட்ட 17 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். முதலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன் அங்கே முறைகேடாக வசதிகளை பெற்றார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து தற்போது பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது சிறையில் 100 நாட்களை கழித்து விட்ட தர்ஷன் தொடர்ந்து தனக்கு ஜாமீன் கேட்டு மனு செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் செப்டம்பர் 27ம் தேதிக்கு அதன் விசாரணையை தள்ளி வைத்தது. அதேசமயம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15, 16, 17 எண் கொண்ட குற்றவாளிகள் மூவருக்கு மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.