லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மலையாள நடிகையான நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றாலும் இந்து மதத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கிய நயன்தாரா தாங்கள் காதலித்து வரும்போதே அவருடன் சேர்ந்து பல இந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்கள் மகன்கள் உயிர், உலக் உடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்கள், அப்போது விக்னேஷ் சிவனும், மகன்களும் தரையில் சாஷ்டாங்கமாக படுத்து முருகனை வழிபட்டுள்ளார்கள். அதேபோல் நயன்தாரா முட்டி போட்டு அமர்ந்து முருகனை வழிபட்டுள்ளார். இது குறித்த புகைப்படம், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.