லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்தியதாக சொல்லி நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்கள். அதோடு அவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் நடிகை குஷ்புவிடத்தில் சினிமா துறையில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறதே என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், 3000 கிலோ போதை பொருள் சிக்கினால் அது எல்லாமே சினிமா துறையில் தான் பயன்படுத்தப்பட்டது என்று சொல்லுவதா? சினிமா துறையைச் சார்ந்த இரண்டு பேர் கைது ஆனதும் சினிமாவில் போதை பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டது என்று கதை கட்டி விடாதீர்கள். போதைப் பொருள் புழக்கம் என்பது எல்லா இடத்திலும் இருக்கிறது.
சினிமா நடிகர்களும் எல்லோரையும் போன்று மனிதர்கள் தான். அதனால் சினிமா துறையில் நடப்பதை மட்டும் பூதக்கண்ணாடி வச்சு பார்க்காதீங்க. ஒருவர் போதைப் பொருளுக்கு அடிமை ஆகிவிட்டார் என்றால், அவர் எதனால் அப்படி ஆனார் என்று யோசித்து பிரச்னைகளை தீர்க்க தான் பார்க்க வேண்டுமே ஒழிய அதை பெருசாக்கி பார்க்க கூடாது என்று காட்டமாக பதில் கொடுத்துள்ளார் குஷ்பு .