புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அம்பிகா. தற்போது டிவி சீரியல்களிலும், சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
“ரொம்ப நாளா இங்க வரணும்னு ஆசை. கொஞ்ச நாளாவே இந்த கோயிலைப் பத்தி பேச்சுல வந்துக்கிட்டே இருந்தது. திடீர்னு முடிவெடுத்து இங்க தரிசனத்துக்கு வந்தேன். தரிசனம் ரொம்ப அழகா இருந்தது. இந்த இடம் பார்க்கிறதுக்கு ஆச்சரியமா இருக்கு, ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.
கோவிலைச் சுற்றி வரும் போது கண்களில் கண்ணீருடனே நடந்து சென்றார். மேலும் அரசியல் குறித்து பேசுகையில், “சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா அனைவருமே சினிமாவிலிருந்து வந்தவர்கள்தானே. நான் பிரபலமாக இருக்கேன்னு அரசியலுக்கு வரக்கூடாது. ரசிகர்கள் நிறைய இருக்காங்கன்னு வரக்கூடாது. ரசிகர்கள் வேற நிஜ வாழ்க்கை வேற. மக்களுக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சி வரணும், மிதப்பு இருக்கக் கூடாது. இறங்கி நடந்து போயி மக்களுக்காக வேலை செய்யணும்” என்றார்.