தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
நடிகர் சிவகுமார் பொதுவாக நடிகைகளுடன் மிக நெருக்கமாக நடிக்க மாட்டார். படுக்கை அறை காட்சிகளை தவிர்ப்பார். கதைக்கு கட்டாயம் தேவைப்பட்டால் அதனை இலைமறை காயாகத்தான் படமாக்கச் சொல்வார். ஆனால் சிவகுமார் 'கற்பூரதீபம்' என்ற படத்தில் அம்பிகாவுடன் மிக நெருக்கமாக நடித்திருந்தார்.
கதைப்படி சிவகுமாருக்கு சுஜாதாவுடன் திருமணம் நடத்திருக்கும், இருவரும் மகிழ்ச்சியாக வாழும் நேரத்தில் அவரது முன்னாள் காதலி அம்பிகா அவரைத் தேடி வருகிறார். அவருக்கும் வாழ்க்கை கொடுக்க வேண்டிய கட்டாயம் சிவகுமாருக்கு.
அதனால் அவருக்கு தனியாக வீடு எடுத்து கொடுத்து சின்னவீடாக வைத்துக் கொள்வார் சிவகுமார். அம்பிகாவின் வீட்டிற்கு சென்றாலே ரொமான்ஸ்தான் இருவரும் கட்டிலில் தாரளமாக கட்டிப்பிடித்து புரள்வார்கள். 'வா... மாலை நேரம்' என்ற பாடல் காட்சியில் சிவகுமாரின் முகத்தையெல்லாம் அம்பிகா கடிப்பார்.
இந்த படம் 'கார்த்திகை தீபம்' என்ற படத்தின் ரீமேக். தெலுங்கு படத்தில் உள்ள காட்சிகளை அப்படியே படமாக்கியதால் வந்த ரொமான்ஸ் இது. இந்த படத்தை ஏ.ஜெகநாதன் இயக்கி இருந்தார். கங்கை அமரன் இசை அமைத்திருந்தார்.