மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

நடிகர் சிவகுமார் பொதுவாக நடிகைகளுடன் மிக நெருக்கமாக நடிக்க மாட்டார். படுக்கை அறை காட்சிகளை தவிர்ப்பார். கதைக்கு கட்டாயம் தேவைப்பட்டால் அதனை இலைமறை காயாகத்தான் படமாக்கச் சொல்வார். ஆனால் சிவகுமார் 'கற்பூரதீபம்' என்ற படத்தில் அம்பிகாவுடன் மிக நெருக்கமாக நடித்திருந்தார்.
கதைப்படி சிவகுமாருக்கு சுஜாதாவுடன் திருமணம் நடத்திருக்கும், இருவரும் மகிழ்ச்சியாக வாழும் நேரத்தில் அவரது முன்னாள் காதலி அம்பிகா அவரைத் தேடி வருகிறார். அவருக்கும் வாழ்க்கை கொடுக்க வேண்டிய கட்டாயம் சிவகுமாருக்கு.
அதனால் அவருக்கு தனியாக வீடு எடுத்து கொடுத்து சின்னவீடாக வைத்துக் கொள்வார் சிவகுமார். அம்பிகாவின் வீட்டிற்கு சென்றாலே ரொமான்ஸ்தான் இருவரும் கட்டிலில் தாரளமாக கட்டிப்பிடித்து புரள்வார்கள். 'வா... மாலை நேரம்' என்ற பாடல் காட்சியில் சிவகுமாரின் முகத்தையெல்லாம் அம்பிகா கடிப்பார்.
இந்த படம் 'கார்த்திகை தீபம்' என்ற படத்தின் ரீமேக். தெலுங்கு படத்தில் உள்ள காட்சிகளை அப்படியே படமாக்கியதால் வந்த ரொமான்ஸ் இது. இந்த படத்தை ஏ.ஜெகநாதன் இயக்கி இருந்தார். கங்கை அமரன் இசை அமைத்திருந்தார்.