பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
நடிகர் சிவகுமார் பொதுவாக நடிகைகளுடன் மிக நெருக்கமாக நடிக்க மாட்டார். படுக்கை அறை காட்சிகளை தவிர்ப்பார். கதைக்கு கட்டாயம் தேவைப்பட்டால் அதனை இலைமறை காயாகத்தான் படமாக்கச் சொல்வார். ஆனால் சிவகுமார் 'கற்பூரதீபம்' என்ற படத்தில் அம்பிகாவுடன் மிக நெருக்கமாக நடித்திருந்தார்.
கதைப்படி சிவகுமாருக்கு சுஜாதாவுடன் திருமணம் நடத்திருக்கும், இருவரும் மகிழ்ச்சியாக வாழும் நேரத்தில் அவரது முன்னாள் காதலி அம்பிகா அவரைத் தேடி வருகிறார். அவருக்கும் வாழ்க்கை கொடுக்க வேண்டிய கட்டாயம் சிவகுமாருக்கு.
அதனால் அவருக்கு தனியாக வீடு எடுத்து கொடுத்து சின்னவீடாக வைத்துக் கொள்வார் சிவகுமார். அம்பிகாவின் வீட்டிற்கு சென்றாலே ரொமான்ஸ்தான் இருவரும் கட்டிலில் தாரளமாக கட்டிப்பிடித்து புரள்வார்கள். 'வா... மாலை நேரம்' என்ற பாடல் காட்சியில் சிவகுமாரின் முகத்தையெல்லாம் அம்பிகா கடிப்பார்.
இந்த படம் 'கார்த்திகை தீபம்' என்ற படத்தின் ரீமேக். தெலுங்கு படத்தில் உள்ள காட்சிகளை அப்படியே படமாக்கியதால் வந்த ரொமான்ஸ் இது. இந்த படத்தை ஏ.ஜெகநாதன் இயக்கி இருந்தார். கங்கை அமரன் இசை அமைத்திருந்தார்.