காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'தக்லைப்' படத்தை அடுத்து ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பு அறிவு என்ற இரட்டையர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் கமல்ஹாசன். அவரது 237வது படமான இப்படம் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகிறது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட போதும், 'தக்லைப்' படத்தின் தோல்வி காரணமாக ஸ்கிரிப்டில் சில மாற்றங்களை செய்து வந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கமல் 237வது படத்தில் மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே தமிழில், சிவகார்த்திகேயனுடன் ஹீரோ என்ற படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன், தற்போது ரவி மோகனுடன் 'ஜீனி' என்ற படத்தில் நடித்துள்ளார்.