காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.. இவ்வழக்கில் நடிகர் திலீப் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக திலீப் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் முடித்துவிட கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் இந்த வழக்கில் போலீசார் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளனர். விசாரண அதிகாரி கொலை திட்டத்தின் பின்னணியில் இருக்கும் ஆதாரங்களை அழிக்க திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் உதவினார் என்ற புகாரின் அடிப்படையில் அவரிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காவ்யா மாதவனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.




