தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சரியாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு சூப்பர் ஹிட் வெற்றிக்காக தொடர்ந்து போராடி வருகிறார் மலையாள நடிகர் திலீப். இந்த வருடம் அவரது நடிப்பில் குடும்பப்பாங்கான திரைப்படமாக வெளியான 'பிரின்ஸ் அன்ட் பேமிலி' திரைப்படம் கூட டீசன்டான வரவேற்பை பெற்றாலும் வசூலில் பெரிதாக சோபிக்கவில்லை.
இந்த நிலையில் அவர் அதிகம் எதிர்பார்த்து வருவது தற்போது நடித்துவரும் 'ப ப ப' படத்தை தான். அறிமுக இயக்குனர் தனஞ்செய் சங்கர் இந்த படத்தை இயக்கி உள்ளார். சமீபத்தில் சூப்பர்ஹிட்டான 'லோகா' படத்தின் மூலம் மலையாளத்தில் பிரபலமான நடன இயக்குனர் சாண்டியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அது மட்டுமல்ல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். நட்சத்திர சகோதரர்களான வினித் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன் இருவருமே இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்கள் போதாது என்று ஒரு முக்கியமான சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் மோகன்லால் திலீப்பின் நட்புக்காக இதில் நடித்துள்ளார்.
அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான 'ஒரு அடார் லவ்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த நூரின் ஷெரீப் என்பவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து இந்த படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளார் என்பது மிக முக்கியமான விஷயம். நீண்ட நாட்களாகவே தயாரிப்பில் இருந்து வந்த இந்த படம் ஒரு வழியாக அனைத்து வேலைகளும் முடிவடைந்து வரும் டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கமர்சியல் அம்சங்களுடனும் இந்த 'ப ப ப' படம் உருவாகியுள்ளதால் நிச்சயம் இந்த படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் நடிகர் திலீப்.