பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவிக்கு வந்தபிறகு தெலுங்கு சினிமா மீது மிகப்பெரிய அளவில் கரிசனம் காட்டாமல் கடுமையான நடைமுறைகளை அமல்படுத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தியேட்டர் கட்டணங்களை அதிரடியாக குறைத்து உத்தரவிட்டார். பின்னர் இதனால் தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து அவரிடம் கோரிக்கை வைத்ததும் தியேட்டர் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதித்தார்.
அதுமட்டுமல்ல தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் விதமாக ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முறையை அரசு செயல்படுத்தும் என்றும் அறிவித்திருந்த ஜெகன் மோகன் ரெட்டி வரும் ஏப்ரல் முதல் அதை நடைமுறைப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். அதனால் இந்த ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முறையை செயல்படுத்துவதற்கான டெண்டரை எடுப்பதற்காக பல நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன.
குறிப்பாக அல்லு அர்ஜுனின் சகோதரரான அல்லு வெங்கடேஷ் என்பவர் தனது கம்பெனி சார்பாக இதற்கான டெண்டரை கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்த டெண்டர் இவருக்குத்தான் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் இதுவரை ஆன்லைன் புக்கிங் முறையில் அதிக கட்டணம் வசூலித்து கோடிகளில் கொடிகட்டி பறந்த ஒரு சில டிக்கெட் புக்கிங் நிறுவனங்கள் இந்த டெண்டரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டன என்றும் சொல்லப்படுகிறது..