ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவிக்கு வந்தபிறகு தெலுங்கு சினிமா மீது மிகப்பெரிய அளவில் கரிசனம் காட்டாமல் கடுமையான நடைமுறைகளை அமல்படுத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தியேட்டர் கட்டணங்களை அதிரடியாக குறைத்து உத்தரவிட்டார். பின்னர் இதனால் தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து அவரிடம் கோரிக்கை வைத்ததும் தியேட்டர் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதித்தார்.
அதுமட்டுமல்ல தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் விதமாக ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முறையை அரசு செயல்படுத்தும் என்றும் அறிவித்திருந்த ஜெகன் மோகன் ரெட்டி வரும் ஏப்ரல் முதல் அதை நடைமுறைப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். அதனால் இந்த ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முறையை செயல்படுத்துவதற்கான டெண்டரை எடுப்பதற்காக பல நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன.
குறிப்பாக அல்லு அர்ஜுனின் சகோதரரான அல்லு வெங்கடேஷ் என்பவர் தனது கம்பெனி சார்பாக இதற்கான டெண்டரை கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்த டெண்டர் இவருக்குத்தான் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் இதுவரை ஆன்லைன் புக்கிங் முறையில் அதிக கட்டணம் வசூலித்து கோடிகளில் கொடிகட்டி பறந்த ஒரு சில டிக்கெட் புக்கிங் நிறுவனங்கள் இந்த டெண்டரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டன என்றும் சொல்லப்படுகிறது..