மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' |
நடிகர் பப்லு பிருத்விராஜ் பீனா என்ற பெண்ணை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவர், கடந்த ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னைவிட முப்பது வயது குறைவான ஷீத்தல் என்ற பெண்ணை காதலிப்பதாக அறிவித்திருந்தார். இருவரும் பொது இடங்களுக்கு ஜாலியாக சுற்றித்திரிந்த புகைப்படங்களும் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது பப்லு - ஷீத்தல் உறவில் விரிசல் விழுந்திருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், இது குறித்து சோசியல் மீடியாவில் ஷீத்தலிடம் ஒரு ரசிகர், நீங்கள் பப்லுவை பிரிந்து விட்டீர்களா என்று கேள்வி கேட்டபோது, அந்த கேள்வியை லைக் செய்து இருந்தார். இந்நிலையில் தற்போது பப்லு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்றுக் கொண்டேன். என்னுடைய பர்சனல் வாழ்க்கையை பர்சனலாக வைக்க தவறி விட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.