300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாக பரவியது. அதில் “ஒரு முட்டாளை திருமணம் செய்யும்போது திருமணம் என்பது ஒரு தவறு என்று ஆகிறது. உங்கள் கணவரின் நடவடிக்கைகளுக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். காரணம் ஆண்கள் உண்மையில் வளர்வதே இல்லை” என்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இதை வைத்து நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் பிரிய போவதாக செய்திகள் பரவின. ஆனால் இது போலியான நபர்களால் உருவாக்கப்பட்ட பதிவு. இதுபற்றி கூட நாம் விசாரித்து ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்ட்ராகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவன் முதுகில் அவர் படுத்திருப்பது போன்ற படம் ஒன்றை வெளியிட்டு “எங்களை பற்றி வரும் கிறுக்குத்தனமான செய்திகளுக்கு எங்களுடைய ரியாக்ஷன்” என்று குறிப்பிட்டுள்ளார்.