அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான அன்னா பென் 'கொட்டுக்காளி' படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் அவருக்கு பாராட்டுகளும், பல விருதுகளும் கிடைத்தது. இந்த நிலையில் அடுத்து அவர் இன்னும் பெயரிடப்படாத படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
இந்த படத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'நாய் சேகர்' படத்தை இயக்கியவரும், கோமாளி, கைதி, விஐபி ', இமைக்கா நொடிகள், கீ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான கிஷோர் ராஜ்குமார் இயக்கி, நாயகனாக நடிக்கிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது “காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. 'பீல் குட்' உணர்வைத் தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் கே.பாக்யராஜ் சார். அவர் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் படங்கள் வருவதில்லையே என்ற குறையை இந்தப் படம் போக்கும். ஜோடி பொருத்தம் பற்றி பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். திறமையான நடிகையான அன்னா பென் உடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி” என்றார்.