பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் |
மிக்ஜாம் புயலால் கடந்தவாரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பொழிந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பல இடங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், சின்னத்திரை ஷூட்டிங்கிறாக போடப்பட்ட பல சீரியல்களுக்கு தேவையான செட்டுகளும் சேதம் அடைந்துள்ளன. பாண்டியன் ஸ்டோர்ஸ், இலக்கியா, கனா காணும் காலங்கள் என பல்வேறு ஹிட் தொடர்களின் ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் கனமழையால் ஏற்கனவே போடப்பட்டிருந்த வீடு, கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என பல செட்டுகள் சேதாரமடைந்துள்ளன. இதை சரி செய்யவே 10 நாட்கள் ஆகும் என்பதால், இந்த செட்டில் நடக்க வேண்டிய சீரியல்களின் ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.