அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
மிக்ஜாம் புயலால் கடந்தவாரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பொழிந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பல இடங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், சின்னத்திரை ஷூட்டிங்கிறாக போடப்பட்ட பல சீரியல்களுக்கு தேவையான செட்டுகளும் சேதம் அடைந்துள்ளன. பாண்டியன் ஸ்டோர்ஸ், இலக்கியா, கனா காணும் காலங்கள் என பல்வேறு ஹிட் தொடர்களின் ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் கனமழையால் ஏற்கனவே போடப்பட்டிருந்த வீடு, கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் என பல செட்டுகள் சேதாரமடைந்துள்ளன. இதை சரி செய்யவே 10 நாட்கள் ஆகும் என்பதால், இந்த செட்டில் நடக்க வேண்டிய சீரியல்களின் ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.