அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பிரபல நடிகரான பப்லு பிருத்விராஜ் தனது காதலி ஷீத்தலுடனான உறவிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த செய்தி தான் கடந்த இரண்டு நாட்களாக இணையதளம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தனது ஸ்டைலில் கிசுகிசுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பப்லு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதனை லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறார். அந்த பேட்டியில் பப்லு பேசியதாவது, 'பயில்வானுக்கு வேறு வேலை இல்லை. அடுத்தவர்களை தரக்குறைவாக பேசினால் தான் அவருக்கு சோறு. அசிங்கமானவர்களால் இப்படி அசிங்கமாக தான் பேச முடியும். காசுக்காக இப்படி அசிங்கமாக பேசலாமா? உன் அம்மாவையோ தங்கையையோ இப்படி ஒருவர் பேசினால் உனக்கு எவ்வளவு வலிக்கும்?' என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.