''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
பிரபல சின்னத்திரை நடிகை ஆயிஷா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் யோகேஷ் என்பவரை காதலித்து வந்ததை வெளிப்படையாக அறிவித்தார். இதனைதொடர்ந்து இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலான நிலையில், ஆயிஷா - யோகேஷ் திருமணம் விரைவிலேயே நடைபெறும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வந்தனர். ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில் யோகேஷுடன் எடுத்துக்கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களையும், டேட்டிங் செய்யும் போது பதிவிட்ட புகைப்படங்களையும் ஆயிஷா தனது இன்ஸ்டாவிலிருந்து திடீரென நீக்கியுள்ளார். மேலும், சமீப காலங்களாக ஆயிஷா தனது போட்டோஷூட் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார். சீரியல் நடிகைகளின் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை தொடர்ந்து பிரிவையும் துயரத்தையும் சந்தித்து வரும் நிலையில் ஆயிஷாவின் இந்த செயலால் யோகேஷுக்கும் ஆயிஷாவுக்கும் ப்ரேக்கப் ஆகிவிட்டதா? என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால் இதுபற்றி ஆயிஷா எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.