கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் பாண்டி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரிட்டோ மனோ நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக சந்தியா ராமசந்திரன் நடித்து வருகிறார். ரீல் ஜோடிகளான இருவரும் நிஜத்திலும் காதல் ஜோடிகளாக வலம் வர, கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனையடுத்து மனோ - சந்தியாவின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இந்நிலையில், தவமாய் தவமிருந்து சீரியலை விட்டு ப்ரிட்டோ மனோ திடீரென விலகியுள்ளார். அதேசமயம், உடனடியாக அவருக்கு பதிலாக பாண்டி ரோலில் நடிக்க நடிகர் சுதர்சனம் கமிட்டாகியுள்ளார். சுதர்சனம் சிப்பிக்குள் முத்து, வேலைக்காரன் மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜக்குமாரி தொடர்களின் மூலம் ஏற்கனவே நேயர்களுக்கு பரிட்சயமானவர் தான். இருப்பினும், ப்ரிட்டோ மனோவின் திடீர் விலகல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.