தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி |

'பிக் பாஸ்' 6வது சீசன் மூலம் புகழ் பெற்றவர் ஆயிஷா. ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார், நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இதுதவிர 'உப்பு புளி காரம்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். தற்போது இன்னும் டைட்டில் வைக்கப்படாத படம் ஒன்றின் மூலம் சினிமா ஹீரோயின் ஆகியுள்ளார்.
அப்ரிஞ்ச் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜாபர் இயக்கும் இந்தப் படத்தில் விடாமுயற்சி கணேஷ் சரவணன் நாயகனாக நடிக்கிறார். சி.சத்யா இசை அமைக்கிறார். சதீஷ்குமார் துரை ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குனர் ஜாபர் கூறியது: இது காமெடி திரில்லர் ஜார்னரில் உருவாகும் படம். 2018ம் ஆண்டு கல்லூரி முடித்த காதலர்கள், ஒரு சந்தர்ப்பத்தில் பிரிகிறார்கள். இப்போது அவர்கள் வேறு ஒரு ஜோடியுடன் திருமணமாகி வாழ்ந்து வருகிறார்கள்.
இப்படியொரு சூழலில் இவர்கள் ஓரிடத்தில் மீண்டும் சந்திக்கிறார்கள். அது ஒரு அறை. அந்த அறை திடீரென லாக் ஆகிவிடுகிறது. அந்த சமயத்தில் உறவினர்கள் பலரும் அங்கு வந்துவிட, கதவு திறக்கப்பட்டு இவர்கள் வெளியே வந்தால் என்ன நடக்கும் என்ற கான்செப்ட்டில் படம் செல்லும். கணேஷ் சரவணனின் மனைவியாக ஆயிஷா நடிக்கிறார்” என்றார்.