அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
வருகிற 3ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனனில் பேரழகி 2, மற்றும் அர்ச்சனை பூக்கள் என்கிற இரண்டு புதிய தொடர்கள் ஒளிரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை 'பேரழகி 2' தொடர் இரவு 8.30 மணிக்கும், 'அர்ச்சனை பூக்கள்' தொடர் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இந்த இரண்டு தொடர்களும் கன்னடத்தில் ஒளிபரப்பான 'லக்ஷனா' மற்றும் 'பாக்யலட்சுமி' தொடர்களின் டப்பிங் வெர்சனாகும்.
'பேரழகி 2' தொடரில் விஜயலட்சுமி, சுக்ருதான நாக் நடித்துள்ளனர். இந்த இருவரை சுற்றி நடக்கும் கதை. இருவரையும் 23 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் மாற்றி வைத்து விடுகிறார். இதில் விஜயலட்சுமி கருப்பாக இருப்பதால் அவரை மகளாகவும், பேத்தியாகவும் அவரது தந்தை மற்றும் அவரது தாயாரால் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை சகித்துக் கொண்டு தொலைக்காட்சி தொகுப்பாளராக வேண்டும் என்று கனவு காண்கிறார். அது நிறைவேறியதா என்பது கதை.
அர்ச்சனை பூக்கள் இரு சகோதரிகளின் கதை, சுதர்ஷன் ரங்கபிரசாத் சுஷ்மா கே.ராவ் நடித்துள்ளனர். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சகோதரிகள் எப்படி ஒருவரை ஒருவர் கைதூக்கி விட்டு காப்பாற்றுகிறார்கள் என்பது கதை.