25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
வருகிற 3ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனனில் பேரழகி 2, மற்றும் அர்ச்சனை பூக்கள் என்கிற இரண்டு புதிய தொடர்கள் ஒளிரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை 'பேரழகி 2' தொடர் இரவு 8.30 மணிக்கும், 'அர்ச்சனை பூக்கள்' தொடர் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இந்த இரண்டு தொடர்களும் கன்னடத்தில் ஒளிபரப்பான 'லக்ஷனா' மற்றும் 'பாக்யலட்சுமி' தொடர்களின் டப்பிங் வெர்சனாகும்.
'பேரழகி 2' தொடரில் விஜயலட்சுமி, சுக்ருதான நாக் நடித்துள்ளனர். இந்த இருவரை சுற்றி நடக்கும் கதை. இருவரையும் 23 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் மாற்றி வைத்து விடுகிறார். இதில் விஜயலட்சுமி கருப்பாக இருப்பதால் அவரை மகளாகவும், பேத்தியாகவும் அவரது தந்தை மற்றும் அவரது தாயாரால் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை சகித்துக் கொண்டு தொலைக்காட்சி தொகுப்பாளராக வேண்டும் என்று கனவு காண்கிறார். அது நிறைவேறியதா என்பது கதை.
அர்ச்சனை பூக்கள் இரு சகோதரிகளின் கதை, சுதர்ஷன் ரங்கபிரசாத் சுஷ்மா கே.ராவ் நடித்துள்ளனர். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சகோதரிகள் எப்படி ஒருவரை ஒருவர் கைதூக்கி விட்டு காப்பாற்றுகிறார்கள் என்பது கதை.