நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து நடிகர் சதீஷ் திடீரென விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இனி அவர் நடிப்பில் 10 முதல் 15 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகும் என கூறியிருந்தார். இதனையடுத்து சதீஷின் ரசிகர்கள் பலரும் 'கோபி கதாபாத்திரத்தில் உங்களை தவிர யாரும் நடிக்க முடியாது. சீரியலில் தொடர்ந்து நடியுங்கள்' என வேண்டுகோள் வைத்து வந்தனர். பாக்கியலெட்சுமி தொடரில் சதீஷுக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் வீஜே விஷால், 'என் அப்பாவை எங்கேயும் போக விடமாட்டேன்' என சதீஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்தார்.
மேலும், சதீஷ் அண்மையில் வெளியிட்ட ஒரு வீடியோவிலும், 'நான் விலகுவதாக சொன்னதும் நிறைய பேர் போகாதீங்கன்னு சொல்லியிருக்கீங்க. ஷூட்டிங் பிசியா போறதுனால எல்லாருக்கும் ரிப்ளை பண்ண முடியல. உங்க அன்புக்கு ரொம்ப நன்றி' என கூறியுள்ளார். அதேசமயம் இம்முறை பேசிய வீடியோவில் பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு விலகுவது குறித்து எதுவும் சொல்லவில்லை. எனவே, அவர் மீண்டும் கோபியாக தொடர்வார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.