புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. கடந்த வருடம் கிரேன் விபத்து ஏற்பட்டதற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவில்லை.
லைக்கா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட நீதிமன்றம் வரை சென்றார்கள். பின்னர் தயாரிப்பாளர் சுபாஷ்கரனை சில வாரங்களுக்கு முன்பு ஷங்கர் சந்தித்துப் பேசி பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்கள் என தகவல் வெளியானது.
அதற்குள் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். 'இந்தியன் 2' படத்தையும் மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று அவர் சொன்னதை பாலோ செய்யவில்லை எனத் தெரிகிறது.
எஞ்சியுள்ள காட்சிகளைப் படமாக்க ஷங்கர் தரப்பில் ஒரு பட்ஜெட்டைச் சொன்னார்களாம். அந்த பட்ஜெட், எவ்வளவு நாட்களில் படமாக்கம் என ஒரு அக்ரிமென்டில் எழுதி கையெழுத்துப் போட வேண்டும் என லைக்கா தரப்பில் ஷங்கரிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு ஷங்கர் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இந்தக் காரணத்தால் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவில்லை.
இப்போதுள்ள சூழ்நிலையில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் நடக்குமா என்பது சந்தேகமே என்கிறது கோலிவுட் தரப்பு. ஷங்கர் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை என்றால் லைக்கா தரப்பில் படத்தை 'டிராப்' செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார்கள்.