மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
நடிகர் வடிவேலு நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது சுராஜ் இயக்கும் நாய்சேகர் படத்தில் நடிக்கப்போகிறார். இந்தபடத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் கூடிய சீக்கிரமே படப்பிடிப்புக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், வடிவேலுவை வைத்து ஐந்து படங்ளை லைகா நிறுவனம் தயாரிக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது நலன்குமாரசாமியிடமும் வடிவேலுவிற்கு அந்நிறுவனம் கதை கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் சில இளவட்ட டைரக்டர்களும் வடிவேலுவிற்கேற்ற காமெடி கதைகளை சொல்லி வருகிறார்களாம்.
ஆக, நாய்சேகர் படத்தை அடுத்து சந்திரமுகி-2வில் நடிக்கயிருப்பதை ஏற்கனவே வடிவேலு உறுதிப்படுத்தி விட்ட நிலையில் அவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.