மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

நடிகர் வடிவேலு நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது சுராஜ் இயக்கும் நாய்சேகர் படத்தில் நடிக்கப்போகிறார். இந்தபடத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் கூடிய சீக்கிரமே படப்பிடிப்புக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், வடிவேலுவை வைத்து ஐந்து படங்ளை லைகா நிறுவனம் தயாரிக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது நலன்குமாரசாமியிடமும் வடிவேலுவிற்கு அந்நிறுவனம் கதை கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் சில இளவட்ட டைரக்டர்களும் வடிவேலுவிற்கேற்ற காமெடி கதைகளை சொல்லி வருகிறார்களாம்.
ஆக, நாய்சேகர் படத்தை அடுத்து சந்திரமுகி-2வில் நடிக்கயிருப்பதை ஏற்கனவே வடிவேலு உறுதிப்படுத்தி விட்ட நிலையில் அவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.