மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. இப்படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஒரு ஊரில் ரஜினியின் ரசிகர்கள் அண்ணாத்த பேனருக்கு முன்பு நடுரோட்டில் வைத்து ஆடு பலி கொடுத்து, அந்த ரத்தத்தை பேனர் மீது அபிஷேகம் செய்தனர் . இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ்வேந்தன் என்ற வழக்கறிஞர் இதுகுறித்து டிஜிபி அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், சில தினங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தின் போஸ்டர் வெளியானபோது அவரது ரசிகர்கள் அண்ணாத்த படத்தின் போஸ்டர் முன்பு கொடூரமாக ஒரு ஆட்டை பலி கொடுத்து அந்த பேனருக்கு ரத்த அபிஷேகம் செய்துள்ளனர். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் பெண்கள், குழந்தைகள் செல்லும் நடுரோட்டில் நடைபெற்றுள்ளது. ஆனால் இதுகுறித்து நடிகர் ரஜினி இதுவரை எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. அவரது செயல்பாடு இதை ஆதரிப்பது போலவே உள்ளது.
கோயில்களில், கறிக்கடைகளில் ஆடு வெட்டுவதையே ஒதுக்குப்புறமாக வைத்து செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு நடிகரின் கட்-அவுட்டுக்கு இப்படி நடுரோட்டில் ஆட்டை பலி கொடுத்தது கொடூரமானது. அதனால் இந்த செயலை கண்டிக்காத ரஜினி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.