புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி உள்ள வெங்கட்பிரபு, அந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளை கவனித்து வருகிறார். இதையடுத்து அவர் யாருடைய படத்தை இயக்கவுள்ளார் என்கிற கேள்வி எழுந்த நிலையில், நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் சுதீப்பிற்கு வெங்கட்பிரபு கோரிய பிறந்தநாள் வாழ்த்தும் அதை உறுதி செய்வது போல இருந்தன.
ஆனால் அவரது அடுத்த படத்தில் பிரபுதேவாவையும், அரவிந்தசாமியையும் கூட்டணி சேர்த்து படம் இயக்க உள்ளாராம் வெங்கட் பிரபு. அந்தவகையில் மின்சார கனவு படத்தை அடுத்து, கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மீண்டும் பிரபுதேவா - அரவிந்தசாமி இருவரும் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும்.
அதேசமயம் இந்தப்படத்தில் வில்லனாக கிச்சா சுதீப்பை நடிக்க வைக்கவும் முயற்சி செய்து வருகிறாராம். அப்படி கதை சொல்ல சென்ற சமயத்தில், சுதீப்புடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டதுடன் அவரது விருந்தோம்பல் குறித்தும் சிலாகித்து கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.