நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் |
சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி உள்ள வெங்கட்பிரபு, அந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளை கவனித்து வருகிறார். இதையடுத்து அவர் யாருடைய படத்தை இயக்கவுள்ளார் என்கிற கேள்வி எழுந்த நிலையில், நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் சுதீப்பிற்கு வெங்கட்பிரபு கோரிய பிறந்தநாள் வாழ்த்தும் அதை உறுதி செய்வது போல இருந்தன.
ஆனால் அவரது அடுத்த படத்தில் பிரபுதேவாவையும், அரவிந்தசாமியையும் கூட்டணி சேர்த்து படம் இயக்க உள்ளாராம் வெங்கட் பிரபு. அந்தவகையில் மின்சார கனவு படத்தை அடுத்து, கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து மீண்டும் பிரபுதேவா - அரவிந்தசாமி இருவரும் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும்.
அதேசமயம் இந்தப்படத்தில் வில்லனாக கிச்சா சுதீப்பை நடிக்க வைக்கவும் முயற்சி செய்து வருகிறாராம். அப்படி கதை சொல்ல சென்ற சமயத்தில், சுதீப்புடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டதுடன் அவரது விருந்தோம்பல் குறித்தும் சிலாகித்து கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.