ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தீபாவளிக்கு வரும் படங்களில் ஒன்று ‛கம்பி கட்ன கதை'. இதில் நட்டி, சிங்கம்புலி நடித்து இருக்கிறார்கள். சென்னையில் நடந்த இந்த பட விழாவில் நட்டி குறித்து உருக்கமாக பேசினார் சிங்கம்புலி. ''நான் இயக்குனராக இருந்தேன். பின்னர், சூழ்நிலை காரணமாக ‛நான் கடவுள்' படத்தில் காமெடி நடிகர் ஆனேன். அந்த படம் வந்தபின் என் வாழ்க்கை மாறும், தினமும் பத்தாயிரம் சம்பளம் வாங்கும் நடிகர் ஆவேன் என்று என் மனைவியிடம் பெருமையாக சொன்னேன். ஆனால், வாய்ப்பு வரலை. 5 ஆயிரம் கேளுங்க என்று என் மனைவி சொன்னார். நான் 2 ஆயிரம் வரைக்கு வந்துவிட்டேன். ஆனாலும், சரிவர வாய்ப்புகள் வரவில்லை.
அப்புறம் ‛மாயாண்டி குடும்பத்தார்' படம் வந்து வெற்றி பெற்றது. அந்த சமயத்தில் ‛மிளகா' படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. என்னை நேரில் பார்த்து பேசிய நட்டி, டக்கென நாலு லட்சம் சம்பளம் கொடுத்தார், அந்த செயலால் மிரண்டுவிட்டேன். அதேபோல் ஒரு சமயம் வெளியூர் படப்பிடிப்புதளத்தில் என்னை அடிக்க சிலர் வந்தார்கள். நான் அவர்களுடன் போட்டோ எடுக்க வாய்ப்பு தரவில்லை என்ற கோபத்தில் கும்பலாக தாக்க வந்தார்கள். நான் அறையில் பதுங்கிவிட்டேன். எனக்காக தைரியமாக சண்டைபோட்டவர் நட்டிதான். இந்த படத்தில் எங்கள் காம்பினேஷன் நல்லா இருக்கும்; படம் பார்த்துவிட்டு சிரிப்பீர்கள். நல்லவரான நட்டி, பல படங்களில் ஏமாற்றுபவராக நடிக்கிறார். அதுதான் சினிமா'' என்றார்.




