பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி |

நட்டி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் 'கம்பி கட்ன கதை'. ராஜநாதன் பெரியசாமி இயக்கி உள்ளார். ஸ்ரீ ரஞ்சினி, சிங்கம்புலி, ஜாவா சுந்தரேசன் நடித்துள்ளனர்.
இதில் நட்டி போலி சாமியாராக நடித்துள்ளார். படம் குறித்து இயக்குனர் ராஜநாதன் கூறும்போது ''போலி சாமியார், காமெடி, ஏமாற்று வேலை இந்த மூன்று வேலையும் யாரால் செய்யமுடியும்? என்று யோசித்தபோது, உடனடியாக எங்கள் மனதுக்குள் வந்தவர் நட்டி. அவரை தவிர யாரும் இதை செய்யமுடியாது என்பதால் அவரை போராடி நடிக்க வைத்தோம்" என்றார்.
நட்டி கூறும்போது, ''சினிமாவில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க தயாராக நடிக்க வேண்டும். அப்படித்தான் செயலாற்றி வருகிறேன். போலி சாமியாராக நடிக்க எனக்கு தயக்கம் இல்லை. அதன் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமே என்கிற மகிழ்ச்சிதான் உள்ளது. என்னை பொறுத்தவரை சினிமாவுக்காக எதையும் செய்யலாம். தொடர்ந்து முழு உழைப்பையும் சினிமாவுக்கு தருவேன்'', என்றார்.