தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் 2021ல் வெளியான படம் 'மாநாடு'. 100 கோடி வசூலைக் கடந்த வெற்றிப் படமாக அமைந்தது. 'டைம் லூப்' படமாக சிறப்பான திரைக்கதையுடன் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற படமாக இருந்தது.
படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. அது குறித்து படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, “நாங்கள் இந்த சுவாரசியமான டைம்-லூப் படம் மாநாடு உருவாக்கியபோது, ஒரு விஷயத்தை உறுதியாக நம்பினேன். எங்கள் பார்வையாளர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் என்று. ஆனால் நீங்கள் அனைவரும் நாங்கள் கற்பனை செய்ததை விட அதிகமாக அதைப் புரிந்துகொண்டீர்கள்!
சினிமாவில் சோதனைகளை கொண்டாடியதற்கு நன்றி. நீங்கள் எங்களை எல்லைகளைத் தள்ள வைக்கிறீர்கள்.. நம்பிக்கைக்கு நன்றி,” என படக்குழுவினரை டேக் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.
'மாநாடு' படத்தின் இரண்டாம் பாகம் வந்தாலும் நன்றாக இருக்கும் என்று அப்போதே ரசிகர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், அது இன்னும் நடக்காமலேயே உள்ளது.