துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை நயன்தாராவின் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று போலீஸ் டி.ஜி.பி.அலுவலதத்திற்கு மின்னஞ்சல் வந்தது.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்களுடன் நயன்தாரா இல்லத்துக்கு விரைந்தனர். வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
சமீபகாலமாக நடிகர், நடிகைகள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது அதிகரித்துள்ளது. நடிகைகள் திரிஷா, சொர்ணமால்யா ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சமீபத்தில் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. குறிப்பாக நடிகர் எஸ்.வி.சேகர் இல்லத்துக்கு இதுவரை 20 தடவை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.