தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

சினிமாவில் ஒரு பாட்டுக்கு நடனமாடும் டான்சராக அறிமுகமான பிரபுதேவா, நடனம் மாஸ்டராகவும் பணியாற்றி வந்தவர், அதன் பிறகு ஹீரோவாகி பின்னர் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி என பல படங்களை இயக்கினார். பின்னர் தெலுங்கு, ஹிந்தியிலும் படங்கள் இயக்கினார். சமீபகாலமாக மீண்டும் நடிகர் மட்டுமின்றி நடனம் மாஸ்டராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது விஜய்யின் கோட் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் பிரபுதேவா அளித்துள்ள ஒரு பேட்டியில், என்னுடைய பிள்ளைகள் இடத்தில் நான் அதிகமான பாசம் வைத்திருக்கிறேன். ஆனால் அது போன்ற தவறை யாரும் செய்யாதீர்கள். காரணம் பிள்ளைகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்தால் அதன் பிறகு அவர்களுக்கு ஒரு சின்ன பிரச்னை ஏற்பட்டால் கூட அதை நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியாது. குறிப்பாக அவர்களை நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று எந்நேரமும் அவர்களைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டே இருப்போம். இதனால் நம்முடைய வாழ்க்கையை நம்மால் நிறைவாக வாழ முடியாது. அதனால் தான் பிள்ளைகள் மீது அதிகப்படியான பாசம் வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.