சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சினிமாவில் ஒரு பாட்டுக்கு நடனமாடும் டான்சராக அறிமுகமான பிரபுதேவா, நடனம் மாஸ்டராகவும் பணியாற்றி வந்தவர், அதன் பிறகு ஹீரோவாகி பின்னர் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி என பல படங்களை இயக்கினார். பின்னர் தெலுங்கு, ஹிந்தியிலும் படங்கள் இயக்கினார். சமீபகாலமாக மீண்டும் நடிகர் மட்டுமின்றி நடனம் மாஸ்டராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது விஜய்யின் கோட் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் பிரபுதேவா அளித்துள்ள ஒரு பேட்டியில், என்னுடைய பிள்ளைகள் இடத்தில் நான் அதிகமான பாசம் வைத்திருக்கிறேன். ஆனால் அது போன்ற தவறை யாரும் செய்யாதீர்கள். காரணம் பிள்ளைகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்தால் அதன் பிறகு அவர்களுக்கு ஒரு சின்ன பிரச்னை ஏற்பட்டால் கூட அதை நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியாது. குறிப்பாக அவர்களை நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்று எந்நேரமும் அவர்களைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டே இருப்போம். இதனால் நம்முடைய வாழ்க்கையை நம்மால் நிறைவாக வாழ முடியாது. அதனால் தான் பிள்ளைகள் மீது அதிகப்படியான பாசம் வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.