மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! |
அண்ணாத்த படத்திற்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. 600 கோடிக்கு மேல் அப்படம் வசூலித்த நிலையில், அதையடுத்து ஞானவேல் இயக்கி உள்ள வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினி. இந்த படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, இந்த படத்தை அடுத்து மீண்டும் நெல்சனுடன் இணைந்து ஜெயிலர்- 2 படத்தில் நடிக்க உள்ளார்.
இதுகுறித்து நெல்சன் கூறுகையில், ஜெயிலர் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அப்படத்தின் கதை திரைக்கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதைவைத்து பார்க்கையில் தற்போது கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்து ஜெயிலர் 2 படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.