26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு மலையாள சினிமாவில் பாலியல் குற்றச்சாட்டு தலைவிரித்தாடுகிறது. பல திரைப்பிரபலங்கள் மீது நடிகைகள் குற்றம் சாட்டி வருகின்றனர். சிலர் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் பெண் கலைஞர்களுக்கு பாலியல் சீண்டல் நடக்கிறது என குரல் கொடுத்தவர்களில் நடிகை ரீமா கல்லிங்கலும் ஒருவர். அதன்பின் தான் ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் ரீமா நல்லவர் அல்ல போதை பார்ட்டி நடத்தியவர் என பாடகி சுசித்ரா குற்றம் சாட்டி உள்ளார்.
பாடகி சுசித்ரா அளித்த பேட்டி ஒன்றில், ‛‛நடிகை ரிமா கல்லிங்கல் சினிமா கேரியர் அடிபட்டதற்கு காரணமே அவர் நடத்திய போதை பார்ட்டி தான். அதில் பல இளம் பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டு போதைக்கு அடிமையானார்கள். கொச்சியில் ரீமா, அவரின் பாய் பிரண்ட் அபு ஆகியோர் வீட்டில் ரெய்டு நடந்தது. அவரை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை. அவர்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு என்ன செய்தார்கள். புதிது புதிதாக டிரக்ஸை கொண்டு வந்தார்கள். அவரின் பார்ட்டிக்கு போன மலையாள இசையமைப்பாளர்கள் பல பேர் என்னிடம் இதுபற்றி சொல்லியிருக்கிறார்கள்'' என்றார்.
இந்த விஷயம் வலைதளங்களில் விவாதமான நிலையில் சுசித்ரா மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக ரீமா கல்லிங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛என் மீது பாடகி சுசித்ரா எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டி உள்ளார். அதுபோன்ற எந்த நிகழ்ச்சியையும் நாங்கள் நடத்தவில்லை. சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அவர் மீது சிறப்பு விசாரணை குழுவில் புகார் அளித்துள்ளேன். அவர் மீது அவதூறு வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்'' என தெரிவித்துள்ளார்.




