புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
அடிக்கடி பாலியல் புகார்களை கிளப்பும் பாடகி சுசித்ரா, தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அவர் ஏற்கெனவே விஷால் மீது பல புகார்களை கூறியுள்ளார். தற்போது விஷால் உடல்நலக்குறைவாக இருக்கிறார். அண்மையில் நடந்த மத கஜ ராஜா பட விழாவில் விஷால் உடல் நலிந்த நிலையில் கைகள் நடுங்கும் நிலையில் கலந்து கொண்டார். இது வைரல் ஆனது. இந்த நிலையில் விஷால் மது பாட்டிலுடன் தவறான எண்ணத்தில் தன் வீட்டு கதவை தட்டியதாகவும், அதனால் எனக்கு மகிழ்ச்சி என்றும் வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:
விஷாலின் இந்த நிலைமையை பார்த்து பலர் வருத்தப்பட்டு இருப்பீர்கள். நான் விஷால் குறித்து பல வருடத்திற்கு முன் நடந்த விஷயத்தை கூறுகிறேன். எனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாருடன் நான் வாழ்ந்து கொண்டு இருந்தபோதுதான், இந்த சம்பவம் நடந்தது. அடிக்கடி கார்த்திக் குமார் ஏதாவது ஒரு காரணம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி விடுவார். ஒருநாள் கார்த்திக் இல்லாதபோது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.
கதவை திறந்து பார்த்தால் விஷால் கையில் ஒயின் பாட்டிலுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் போதையில் இருந்தார் என்பது அவரை பார்க்கும்போதே தெரிந்தது. உடனே கார்த்திக் குமார் இல்லையா என்று கேட்க, நான் இல்லை என்றேன். உடனே நான் உள்ளே வரவா என்று விஷால் கேட்டார். நான் 'நோ' என்று சொல்லிவிட்டேன். உடனே அவர் கையில் இருக்கும் ஒயின் பாட்டிலை என்னிடம் நீட்டி இதற்காகத்தான் வந்தேன் என்றார். கார்த்திக் குமார் இல்லாத நேரமாக பார்த்து வீட்டுக்கு வந்து எனக்கு ஒயின் பாட்டிலை கொடுத்தார்.
நான் அதை வாங்காமல் கவுதம் மேனன் அலுவலகத்தில்தான் கார்த்திக் குமார் இருக்கிறார், அங்கேபோய் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு கெட்டவார்த்தையால் அவனை திட்டினேன். அது அவன் காதில் விழாதது போல் என்ன சொன்னீங்க என்றதும், இங்கே ஒரு பூனை அடிக்கடி இப்படித்தான் தொல்லை பண்ணும் நீங்க போங்க என்று சொல்லிவிட்டு கதவை சாத்திவிட்டேன். அன்று தவறான எண்ணத்துடன் மது பாட்டிலை பிடித்த கைகள்தான் இன்று நடுங்கியபடி காட்சி தருகிறது. இது எனக்கு சந்தோஷம்தான். என்று சுசித்ரா கூறியுள்ளார்.